அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-01-06 18:46 GMT

தோகைமலை அருகே நாகநோட்டக்காரன்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் திருவாதிரை மற்றும் பவுர்ணமியையொட்டி நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டு 108 பெண்கள் கோவில் வளாகத்தில் வரிசையாக அமர்ந்து திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். பிறகு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள், வளையல்கள் வழங்கப்பட்டன.

நொய்யல் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.வேலாயுதம்பாளையம் அருகே தளவாபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில்அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்