அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-07-07 18:29 GMT

வேலாயுதம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதேபோல காகிதபுரம், தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, வாங்கல் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்