மக்கள் நீதிமன்றத்தில் 16 வழக்குகளுக்கு தீர்வு

அருப்புக்கோட்டையில் மக்கள் நீதிமன்றத்தில் 16 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-03-11 19:25 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி ராமலிங்கம் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கலைநிலா தலைமையில் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் 16 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, இழப்பீடு தொகையாக ரூ.49 லட்சத்து 47 ஆயிரத்து 200 பெறப்பட்டது. இதில் அருப்புக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தலைவர் குருசாமி, மூத்த வழக்கறிஞர்கள் அழகர்சாமி, செல்ல பாண்டியன், மோகன் மற்றும் இன்சூரன்ஸ் கம்பெனி மேலாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்