செங்கோட்டை- மதுரை ெரயிலுக்கு விருதுநகரில் வரவேற்பு

செங்கோட்டை- மதுரை ெரயிலுக்கு விருதுநகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-07-01 20:25 GMT

செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு நேற்று முதல் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் கட்டண பயணிகள் ெரயில் இயக்கப்பட்டதை தொடர்ந்து இந்த ெரயில் விருதுநகர் ெரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்ய செயலாளர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் நாகேந்திரன் பன்னீர் ராஜ்குமார், வியாபார பிரமுகர் இசக்கி முத்து ஆகியோர் விருதுநகர் ெரயில் நிலைய கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் ெரயில் என்ஜின் டிரைவர்கள், காப்பாளர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்