பல்லடம் அருகே பா.ஜ.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

திருப்பூர் பல்லடம் அருகே பா.ஜ.க. பிரமுகரை 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது

Update: 2024-08-20 02:43 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் பா.ஜனதா கட்சி பனப்பாளையம் கிளை தலைவராக உள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு தமிழ்ச்செல்வனும், அவரது நண்பரான டைமண்ட் என்பவரும் பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அரிவாள், பட்டாக்கத்திகளுடன் காரில் வந்து இறங்கிய 8 பேர் கொண்ட கும்பல், இருவரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.

இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்-பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. படுகாயம் அடைந்த இருவரும் பல்லடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்