வெளுத்து வாங்கும் வெயில் விறுவிறுப்பாக விற்பனையாகும் தர்பூசணி

வெளுத்து வாங்கும் வெயிலால் தர்பூசணி பழங்கள் விறுவிறுப்பாக விற்பனையாகின்றன.

Update: 2023-03-07 18:45 GMT

சிங்கம்புணரி,

குளிர் காலம் முடிந்து தற்போது கோடை காலம் தொடங்்கிவிட்டது. இதனால் காலை முதல் வெயில் பொதுமக்களை வெளுத்து வாங்குகிறது. இதனால் வெப்பத்தை தவிர்க்க பொதுமக்கள் குளிர்ச்சியான உணவுகளையும், குளிர்பானங்களையும் பருக தொடங்கிவிட்டனர். சிங்கம்புணரி பகுதியில் கோடைகாலத்திற்கு ஏற்றவாறு உடல் சூட்டை தணிக்க பல்வேறு உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் சிங்கம்புணரி பகுதியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. சிங்கம்புணரி கோவில் வாசல் அருகில் மற்றும் பெரிய கடை வீதி பகுதியில் என பல பகுதிகளில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதனை வாங்கி ருசித்து சாப்பிடுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்