குற்றாலம் சாரல் விழா சின்னம் வரைவோருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு; கலெக்டர் ஆகாஷ் அறிவிப்பு

குற்றாலம் சாரல் விழா சின்னம் வரைவோருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என கலெக்டர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.

Update: 2022-07-20 15:46 GMT

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

குற்றாலத்தில் சாரல் திருவிழா வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த சாரல் விழாவிற்கான சின்னம் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த சின்னத்தை வடிவமைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் சாரல் திருவிழா தொடர்பான சின்னத்தை வடிவமைத்து edm.tenkasi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 24-ந் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படும் சின்னத்தை வடிவமைத்தவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்