விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் நிதி

விருதுநகர் அருகே விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

Update: 2022-05-28 19:27 GMT

விருதுநகர், 

விருதுநகர் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவில் ஆலங்குளம் போலீஸ்கழகத்தில் பணியாற்றிய முதல்நிலை போலீஸ்காரர் செல்வகுமார் கடந்த டிசம்பர் மாதம் பணி முடிந்து வரும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவருடன் கடந்த 2011-ல் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள 4,700 போலீசார் அவரது குடும்ப நல நிதிக்கு ரூ.23 லட்சத்து 79 ஆயிரத்து 801-ஐ வழங்கினர். இந்த நிதியினை மறைந்த போலீஸ்காரர் செல்வக்குமாரின் மனைவி பிரியங்காவிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செல்வக்குமாரின் மனைவி பிரியங்கா கடந்த 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த மாரிமுத்து என்ற போலீஸ்காரரின் மகள் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நிலையில் அந்த சிறுமியின் சிகிச்சைக்காக ரூ. 1 லட்சம் நிதியினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரிடம் வழங்கினார்.


Tags:    

மேலும் செய்திகள்