ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர் தர்ணா

மன்னார்குடியில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்

Update: 2022-07-20 18:23 GMT

மன்னார்குடி:

மன்னார்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். மன்னார்குடி கிளை நிர்வாகிகள் பாஸ்கரன், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை தஞ்சை மாவட்ட செயலாளர் மகேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் தஞ்சை மாவட்ட செயலாளர் பிச்சை கண்ணு கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனவரி 2017 முதல் வழங்க வேண்டிய 15 சதவீத ஓய்வூதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள மருத்துவ படிகளை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்