ஆற்றில் மூழ்கி மாயமான தொழிலாளி பிணமாக மீட்பு

கீழ்வேளூர் அருகே ஆற்றில் மூழ்கி மாயமான தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2022-10-16 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் அருள்செல்வன் (வயது36). கூலித் தொழிலாளி.இவர் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து, தேவூர் கடுவையாற்றில் குளித்த போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்த கீழ்வேளூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை அருள்செல்வன் ஆற்றில் பிணமாக மிதந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த ‌ கீழ்வேளூர் போலீசார் அருள்செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அருள் செல்வனுக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்