சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி அருகே உள்ள கணஞ்சாம்பட்டியில் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பம் சேதமடைந்துள்ளதால் இதில் இருந்த தெரு விளக்கு அப்புறப்படுத்தப்பட்டது.
இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஆகையால் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைத்து தெருவிளக்கு பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.