இ-சேவை மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை

இ-சேவை மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-28 19:12 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தினமும் ஆதார் கார்டில் உள்ள பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி, செல்போன் எண் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வருகின்றனர். இங்கு வருபவர்கள் தங்கள் பணிக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த மையத்தில் கூடுதல் பணியாட்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மையத்தை பார்வையிட்டு கூடுதல் ஆட்களை நியமித்து பணியினை தாமதமின்றி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்