அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்

சங்கராபுரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்

Update: 2022-08-14 16:50 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை அகற்றும் பணி செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கடைவீதி, மும்முனை சந்திப்பு, கள்ளக்குறிச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள், பேனர்கள், பலகைகளை பேரூராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அப்போது இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்