ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா

கீழ்விஷாரத்தில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-08-20 18:55 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் எதிரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஜி.விநாயகம், மாவட்ட சிறுபான்மைத்துறை தலைவர் நிஷாத் அஹமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல்விஷாரம் நகர தலைவர் அப்துல்சுகூர் வரவேற்றார்.

விழாவின் போது நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டு பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஆற்காடு நகர தலைவர் பியாரேஜான், ஆற்காடு மேற்கு வட்டார தலைவர் புஷ்பராஜ், மாவட்ட செயலாளர் முகமது அமினுல்லா, மாணவர் காங்கிரஸ் மாநில செயலாளர் தருண்குமார், ஓ.பி.சி. மாவட்ட தலைவர் மொய்தீன், ஆற்காடு இலியாஸ், அப்துல்லா, சேட்டு, மோகன், இளைஞர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு தொகுதி தலைவர் சாஹிப் நிக்கால், பயாஸ், வகாப் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் அழகேசன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்