அதிமுக-பாஜக ஆட்சியில் 39 ஆக இருந்த குவாரி திமுக ஆட்சியில் 6 ஆக குறைப்பு - அமைச்சர் மனோ தங்கராஜ்

அதிமுக-பாஜக ஆட்சியில் குமரி மாவட்டத்தில் 39 ஆக இருந்த குவாரி, திமுக ஆட்சியில் 6 ஆக குறைக்கபட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

Update: 2022-09-22 03:41 GMT

சென்னை,

அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கடந்த ஆட்சியில் 39 குவாரிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று ஒரே அணியில் இருந்தவர்கள் தான் அதிமுக மற்றும் பாஜகவினர் என்பதை மக்கள் நன்கு அறிவர்.

சென்ற ஆட்சியை போன்று குமரியில் விதிகளுக்கு புறம்பாக எந்த குவாரிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. குவாரிகளில் இருந்து வெளி மாநிலத்திற்கு கற்கள் கொண்டு செல்ல அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை. இந்த உண்மைகளை ஏன் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேச மறுக்கிறார்?

முன்னாள் மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் என்னுடன் ஒரே மேடையில் செய்தியாளர்கள் முன்னிலையில் விவாதிக்க தயாரா? அதிமுக-பாஜக ஆட்சியில் குமரி மாவட்டத்தில் 39 ஆக இருந்த குவாரி, திமுக ஆட்சியில் 6 ஆக குறைக்கபட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்