மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம் நடந்தது

Update: 2022-08-31 17:45 GMT

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜு, மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், மாரியப்பன், வனரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதைப்போல மாப்படுகை அண்ணா சிலை முன்பு பிரசார கூட்டம் நடந்தது.








Tags:    

மேலும் செய்திகள்