பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் - கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Update: 2022-07-17 10:24 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இதில் காவல்துறையினர் மீது கல்வீச்சு காவல்துறையின் வாகனம் மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்கார்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர் .

மாணவி இறப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார்பாளையம் உள்ள்ளிட்ட தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் கூறுகையில், மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருகிறது . போராட்டம் நடைபெறும் இடத்தில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்