தர்மபுரியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-06-15 19:00 GMT

தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயபிரசாத், மாநில தலைவர் ராமச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் மணி, அரசு பணியாளர் முன்னாள் நிர்வாகிகள் கோவிந்தன், பாஸ்கரன், நிர்மல்குமார், சங்க நிர்வாகிகள் நந்தகுமார், சாம்ராஜ், வெங்கடாசலம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி உயர்வு தொடர்பாக திருத்தப்பட்ட அரசாணையை வெளியிட வேண்டும். வருவாய்த்துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு பெறும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சட்ட விதிகளை பின்பற்றி முதுநிலை நிர்ணயம் செய்ய வேண்டும். பதவி உயர்வு வழங்கும்போது விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வருவாய் துறை பதவி உயர்வு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்