பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலம்

தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2023-03-01 16:36 GMT

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரவிழா வருகிற 8-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று மாணவ-மாணவிகள் பங்கேற்க விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ, முன்னாள் துணை இயக்குனர் சந்திரா, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தின் போது 'இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்', 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் ஏந்தி சென்றனர். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவுபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்