சிறையில் கைதி திடீர் சாவு

மதுரை சிறையில் கைதி திடீரென உயிரிழந்தார்.

Update: 2023-08-09 21:46 GMT


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கொள்ளக்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் தாசையா (வயது 62). கடந்த 2019-ம் ஆண்டு இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களாக தாசையாவுக்கு சிறுநீரக பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதற்காக அவர் சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு தாசையா சிறையில் மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தாசையா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்