பெத்தாசமுத்திரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பெத்தாசமுத்திரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-27 18:45 GMT

கள்ளக்குறிச்சி அருகே பெத்தாசமுத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக நயினார்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூர், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், தாகம்தீர்த்தாபுரம், குரால், காளசமுத்திரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனுர், கூகையூர், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், ஈரியூர், பெருமங்கலம் ,கருங்குழி, கீழ்நாரியப்பனூர், தென்சிறுவலூர், சின்னசேலம் காந்திநகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்