சஷ்டியையொட்டிபாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2023-01-13 18:45 GMT

நாமக்கல்லில் மோகனூர் சாலையில் பாலதண்டாயுத பாணி சாமி கோவில் உள்ளது. இங்கு மார்கழி மாத தேய்பிறை சஷ்டியையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக முருகனுக்கு பால், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர் உள்பட 16 பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வெள்ளிகவச அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்