மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-16 18:45 GMT


மின் கட்டண உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்கட்டண உயர்வு

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாரதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் செல்லையன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், சக்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர். நகர செயலாளர் செந்தமிழன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் மின்கட்டண உயர்வை கண்டித்து பேசினார்.

திரும்ப பெற வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ஆகிய கோாிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் நாஞ்சில் கார்த்திக், ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன், ஜனார்த்தனன், நற்குணன், இளங்கோவன், மகேந்திரவர்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்