பா.ம.க. பொதுக்குழு கூட்டம்

ஆற்காடு வடக்கு ஒன்றிய பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-16 15:22 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வடக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆற்காடு அடுத்த நந்தியாலம் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நடராஜன், ராஜலிங்கம், ஜெகன், குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எம்.கே. முரளி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. எல்.இளவழகன், முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆற்காடு வடக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடி ஏற்றி திண்ணைப் பிரச்சாரம் செய்வது. தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே பூட்டுத்தாக்கு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்துவது. அரும்பருதி கிராமத்தில் அமைந்துள்ள மணல் குவாரியில் அரசு விதிமுறைகளை வீதி முறைகேடாக மணல் அள்ளப்படுகிறது. எனவே மணல் குவாரியை மூடுமாறு கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்