திருவெண்ணெய்நல்லூர் அருகே பா.ம.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை

திருவெண்ணெய்நல்லூர் அருகே பா.ம.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-15 16:39 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் கபிலன் (வயது 25), என்ஜினீயரான இவர் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய பா.ம.க. இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கபிலன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கபிலன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து கபிலன் உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்