பிளஸ்-2 மாணவி மாயம்

சின்னசேலம் அருகே பிளஸ்-2 மாணவி மாயம்

Update: 2023-04-11 18:45 GMT

சின்னசேலம்

சின்னசேலம் அருகே எரவார் நடுத்தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 48) விவசாயி. இவரது மகள் பைரவி(வயது 17). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு நீட் பயிற்சி பெற்று வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கூறிச்சென்ற பைரவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் பைரவியை காணவில்லை. பின்னர் இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்