பிளஸ்-2 மாணவி மாயம்
திருக்கோவிலூர் அருகே பிளஸ்-2 மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே தேவியகரம் கச்சிக்குவச்சான் பகுதியை சேர்ந்தவர் சக்கரை மகள் ஷியாமளா (வயது 17). இவர் திருக்கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத மாணவி பள்ளிக்கு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி பார்த்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.