விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை

திருவண்ணாமலையில் விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-01 13:37 GMT

திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரது மகள் அர்ச்சனா (வயது 15). இவர் திருவண்ணாமலை அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த 30-ந் தேதி அர்ச்சனாவை அவரது உறவினர் ஏன் அம்மாவுடன் பூப்பறிக்க நிலத்திற்கு போகவில்லை என்று கண்டித்ததாக கூறப்படுகிறது.

அதனால் கோபித்து கொண்ட அர்ச்சனா வீட்டில் இருந்த விஷத்தை (பூச்சி மருந்து) எடுத்து குடித்து வாந்தி எடுத்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சனாவின் தாய் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று  அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்