பூட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Update: 2022-08-13 17:44 GMT

சங்கராபுரம்

ஊரணி பொங்கல்

சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆடி மாத தேர் திருவிழா கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து தினமும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. ஆடிமாத கடைசி வெள்ளியான நேற்று முன்தினம் ஊரணி பொங்கல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபட்டனர்.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தேருக்கு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ஒன்றிய குழு தலைவர் திலகவதி நாகராஜன், அட்மா குழு தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் ஜாகிர் முத்துசாமி வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து செம்பராம்பட்டு கிராமத்தை சென்றடைந்தது. இதில் அரசு வக்கீல் பாலஅண்ணாமலை, சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை, மாவட்ட குழு உறுப்பினர் சுகன்யா சுரேஷ், பூட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா கொளஞ்சியப்பன், துணைத்தலைவர் பச்சமுத்து, ஒன்றிய கவுன்சிலர் சரோஜா கோவிந்தன், செம்பராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், துணைத் தலைவர் சூர்யாசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்றும் நடக்கிறது

தொடர்ந்து தேர் இன்றும்(ஞாயிற்றுக்கிழமை), நாளையும்(திங்கட்கிழமை) பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிலையை வந்தடைகிறது. நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.  அசம்பாவித சம்பவங்களை தடுக்க சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பாண்டியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்