சிறுபான்மை மக்களை தரக்குறைவாக பேசிய சீமானை கைது செய்ய வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

சிறுபான்மை மக்களை தரக்குறைவாக பேசிய சீமானை கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-08-04 20:56 GMT

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் சிறுபான்மையினர் நல கூட்டமைப்பு பிரதிநிதிகள் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறுபான்மை மக்கள் குறித்து கடந்த சில தினங்களாக அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என அனைவரும் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் போது தேவையில்லாத சமூக பகையை ஏற்படுத்தும் வகையில் சீமானின் பேச்சு உள்ளது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்