ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தர்ணா

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-22 18:23 GMT

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற இருந்தது. இதையொட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்த சாத்தம்பாடி ஊராட்சியை சேர்ந்த 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி, ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சியில் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்றவற்றை சரியாக செய்யவில்லை. ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாத்தம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே தரையில் அமர்ந்து அமைதியான முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்