ராமேசுவரத்திற்கு பாதயாத்திரையாக வந்த முதியவர்

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு பாதயாத்திரையாக வந்த முதியவர்

Update: 2023-01-08 18:45 GMT

காரைக்குடி,

உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 70). இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து பாதயாத்திரையாக ராமேசுரம் செல்ல முடிவு செய்தார். கடந்தாண்டு மே 22-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரி பகுதியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டார். பல்வேறு மாநிலங்கள் வழியாக அவர் நேற்று முன்தினம் காரைக்குடி வழியாக ராமேசுவரத்திற்கு நடந்து சென்றார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- உலக நாடுகள் முழுவதும் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், சண்டையின்றி சமாதானத்தை உலக நாடுகள் கடைபிடித்து மகிழ்ச்சியுடன் வாழவும், உலகில் கொடிய நோய் பரவாமல் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாதயாத்திரை பயணத்தை தொடங்கி உள்ளேன். கடந்தாண்டு மே மாதம் 22-ந்தேதி எனது பாதயாத்திரையை தொடங்கி நான் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தமிழகத்தை வந்தடைந்தேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவா் தனக்கு தேவையான உடைமைகளை டோலி போன்று கட்டி எடுத்துச் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்