கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே சூரப்பட்டி நான்கு வழி சாலையில் கரூர் தோகமலையில் இருந்து பூவந்திக்கு கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதனால் சாலையில் கிராைனட் கற்கள் கிடந்தன.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து சாலையில் கிடந்த கற்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதன் காரணாக அந்த பகுதியில் சுமார் 4 மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.