பாம்பு கடித்து மூதாட்டி சாவு

அய்யம்பேட்டை அருகே பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழந்தார்.

Update: 2023-04-09 19:25 GMT

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே கோவிலடியை சேர்ந்தவர் வேம்பு (வயது 70). சம்பவத்தன்று அதிகாலை இவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்து விட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வேம்பு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்