சிறுமி பலாத்கார வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பலாத்கார வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-19 20:11 GMT

பாலியல் பலாத்காரம்

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் துரை(வயது 70). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்த அந்த பகுதியில் உள்ளவர்கள் சத்தம் போட்டனர். இதனால் துரை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை திருச்சி மகிளா கோர்டில் நடைபெற்று வந்தது. வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும் வந்த நிலையில் சமீபத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று மகிளா கோர்ட்டு நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பு கூறினார். இதில், துரை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்