5 ஆண்டுகளாக உயர்த்தாமல் இருப்பது சமூக அநீதி: 'கிரீமிலேயர்' வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்

5 ஆண்டுகளாக உயர்த்தாமல் இருப்பது சமூக அநீதி ‘கிரீமிலேயர்’ வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2022-09-01 19:04 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய அளவில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பு இன்று வரை உயர்த்தப்படவில்லை.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உயர்கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான இந்த நடவடிக்கையை மத்திய அரசு தாமதப்படுத்துவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

1993-ம் ஆண்டில் ரூ.1 லட்சமாக இருந்த கிரீமிலேயர் வரம்பு 2004-ம் ஆண்டில் 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் 2008-ம் ஆண்டில் ரூ.4.5 லட்சம், 2013-ம் ஆண்டில் ரூ.6 லட்சம், 2017-ம் ஆண்டில் ரூ.8 லட்சம் என 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டு வந்து கொண்டுதான் இருந்தது.

இந்த முறை தான் 5 ஆண்டுகளாகியும் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை. இந்த சமூக அநீதியை மத்திய அரசு உடனடியாக போக்க வேண்டும். அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சேர்த்து கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும். அதன்மூலம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூகநீதியை மத்திய அரசு காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்