மயிலாடும்பாறை அருகேவிவசாயியை கத்தியால் குத்திய 2 பேர் மீது வழக்கு

மயிலாடும்பாறை அருகே விவசாயியை கத்தியால் குத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-01-30 18:45 GMT

மயிலாடும்பாறை அருகே ஆத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தவசிராஜா (வயது 47). விவசாயி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையங்கோட்டையை சேர்ந்தவர் முருகன் (47). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 15-ந்தேதி தவசிராஜா வீட்டுக்கு முருகன், அவரது மகன் ரஞ்சித்குமார் (18) ஆகியோர் சென்று அவரை தாக்கி, கத்தியால் குத்தினர். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியையும் பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து தவசிராஜா ஆண்டிப்பட்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த கோர்ட்டு 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று முருகன், ரஞ்சித்குமார் ஆகிய 2 பேர் மீதும் கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்