கூடலூர் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

கூடலூர் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது

Update: 2022-08-18 16:47 GMT

கூடலூர்அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் முருகன் தலைமை தாங்கினார், டாக்டர் காஞ்சனா, சித்த மருத்துவர் சிராஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்களுக்கு இதயம், எலும்பு, கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன் முதலிய சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிறப்பு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் சித்த மருத்துவ பிரிவு சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்