முத்துமாரியம்மன் கோவில் பூசாரி மயங்கி விழுந்து சாவு

முத்துமாரியம்மன் கோவில் பூசாரி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2023-03-27 19:14 GMT

அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அங்கு கோவில் பூசாரியாக வேலை பார்த்துக்கொண்டிருந்த நெடுஞ்சேரியை சேர்ந்த ராஜா(வயது 41) என்பவர் பக்தர்கள் கொண்டு வந்த பால் மற்றும் தேங்காய், பழங்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென பூசாரி ராஜா மயங்கி கீழே சரிந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்