முத்துலெட்சுமிபுரம் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா

முத்துலெட்சுமிபுரம் சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-09-07 18:45 GMT

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் முத்துலட்சுமிபுரம் யாதவர் தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் மாலையில் குடியழைப்பு மற்றும் சிறப்பு அலங்கார பூஜையும், 2-வது நாள் காலையில் அலங்கார தீபாராதனையும், மதியம் 12மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடல் மாலை 4 மணிக்கு அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இரவு 11மணிக்கு ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். பின்னர் அம்மனக்கு சிறப்பு பூஜையும், அதிகாலை 2மணிக்கு படைப்பு தீபாராதனையும் 3-வது நாள் காலை 7மணிக்கு உணவு பிரித்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்