பன்னாட்டு நிறுவன வேலைவாய்ப்பு பயிற்சி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவன வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Update: 2023-02-12 16:58 GMT

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டுபடிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும் சேர விண்ணப்பிக்கலாம்.

3 மாதம் நடைபெறும் இப்பயிற்சியினை பெற அனைத்து செலவுகளும் தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தேர்வில் பெற்றிபெறும் மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம். இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்