மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்
முக்கூடலில் மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்.
முக்கூடல்:
முக்கூடல் பாலகன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 54). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் முக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆக்னல் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், காமராஜர் தெருவை சேர்ந்த பூவையா மகன் செல்வராஜா (46) என்பவர் ரமேசின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜாவை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.