மோட்டார் சைக்கிள் திருட்டு

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே மோட்டார் சைக்கிள் திருடு போனது.

Update: 2023-06-02 19:39 GMT

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே உள்ள பிராஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவரின் மகன் தளவாய் (வயது 48). விவசாயி. இவர் அங்குள்ள சுடுகாடு பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தாராம். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் அந்த மோட்டார் சைக்கிள் டேங் கவரில் செல்போனும் இருந்ததாக தளவாய் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்