2 குழந்தைகளின் தாய் மாயம்

2 குழந்தைகளின் தாய் மாயமானார்.

Update: 2023-04-20 19:25 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி காலனி தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி கொடியரசி (வயது 25). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். முருகன் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் தமிழ் புத்தாண்டுக்கு சொந்த ஊர் வந்த முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தனது அக்காளும், தனது மனைவியின் தாயுமான கீழசிந்தாமணி ஜெயலட்சுமி என்பவர் வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்று விட்டார். இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி தா.பழூரில் உள்ள வங்கிக்கு சென்ற கொடியரசி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்