திருக்கோவிலூரில்ரூ.1½ கோடியில் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான பணிநகரமன்ற தலைவர் டி.என்.முருகன் ஆய்வு

திருக்கோவிலூரில் ரூ.1½ கோடியில் நடைபெற்று வரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான பணியை நகரமன்ற தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-24 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் உள்ள சுடுகாடு வளாகத்தில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் நவீன எரிவாயு தகன மேடை கட்டிடம் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நகரமன்ற தலைவர் டி.என். முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கு பணியில் இருந்த பொறியாளரிடம் கட்டுமான பணிகளை தரமாகவும், உரிய காலத்திற்குள்ளும் விரைந்து கட்டி முடித்து, தகன மேடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது நகர தி.மு.க. அவைத் தலைவர் டி.குணா, நகர வர்த்தக சங்கத் தலைவர் கே.ஏ.ராஜா, கவுன்சிலர் கோவிந்தராஜன், தி.மு.க. பிரமுகர் சந்தப்பேட்டை வெங்கடேசன், பா.ம.க. நகர செயலாளர் கேபிள் சரவணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்