நண்பர்களுடன் சுற்றுலா சென்ற வாலிபர் மாயம்

நண்பர்களுடன் சுற்றுலா சென்ற வாலிபர் மாயமானார்.

Update: 2022-12-04 16:47 GMT

தொண்டி, 

தொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்தவர் நெய்னா என்பவரது மகன் வினோத் (வயது 22). இவர் கடந்த 15.9.2022 அன்று தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் தொண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்