குடும்பத்தினருக்கு அமைச்சர் நிதியுதவி

மின்வேலியில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் நிதியுதவி வழங்கினார்.

Update: 2022-08-02 20:45 GMT

காரியாபட்டி, 

திருச்சுழி தாலுகா, நரிக்குடி அருகே முகவூர் கிராமத்தில் வயலுக்கு சென்ற அய்யனார் (வயது 49), அவரது மகன்கள் ராணுவ வீரரான அஜீத்குமார் (24), சுதந்திரபாண்டியன் (21) ஆகியோர் மின்வேலியில் சிக்கி இறந்தனர். இதையடுத்து அமைச்சர் தங்கம்தென்னரசு முகவூர் கிராமத்திற்கு சென்று மின் வேலியில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினார். அப்போது நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் போஸ், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் கமலி பாரதி, பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், நரிக்குடி வடக்கு ஒன்றிய பொருளாளர் முகவூர் மகாலிங்கம், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செல்லப்பா, ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்