மினி லாரி மோதி பெண் பலி

திருக்கோவிலூர் அருகே மினி லாரி மோதி பெண் பலி

Update: 2022-05-20 17:49 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள மேமாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரிநாதன் மனைவி ராணி(வயது 35) ஆவார். இவர் நேற்று திருக்கோவிலூர் -உளுந்துார்பேட்டை சாலையில் மேமாலூர் கிராம பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக மாம்பழம் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த மினிலாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்