மேட்டூர் அணை நீர்மட்டம் 110 அடியை தாண்டியது...!

மேட்டூர் அணை நீர்மட்டம் 110 அடியை தாண்டியுள்ளது.

Update: 2022-07-14 03:48 GMT

சென்னை,

கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105 அடியாக இருந்தது.

இந்த நிலையில், காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 6 அடி உயர்ந்து 110.14 அடியை தாண்டியுள்ளது. நீர் இருப்பு 78.60 டிஎம்சியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 98.208 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 15,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்