பாரா ஒலிம்பிக்கில் பதக்கம்; தமிழக வீரர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-03 20:19 GMT

சென்னை,

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர், விராங்கனைகளுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

"பாரா ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியாவுக்காக பதக்கங்களை நமது பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வென்றது உண்மையிலேயே மறக்க முடியாத மற்றும் மகிழ்ச்சியான தருணங்களாகும். மனிஷா ராமதாஸ், துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சிவன் ஆகியோருக்கு பாராட்டுகள்.

உங்களின் மன உறுதியும் திறமையும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துவது மட்டுமின்றி, தேசத்தின் பெண் சக்தியை ஊக்குவிக்கிறது. பாரதம் விளையாட்டு வல்லரசாக வளருவதற்கு இது சிறந்த உதாரணமாக திகழ்கிறது."

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்